sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

/

மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு


ADDED : ஏப் 12, 2025 09:59 PM

Google News

ADDED : ஏப் 12, 2025 09:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : 'திண்டிவனம் மாவட்ட தலைமை மருத்துவமனை பணிகள் வரும் மே 15ம் தேதிக்குள் முடியும்' என கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

திண்டிவனம் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்காக ரூ. 60 கோடி செலவில் இரண்டு பிளாக்குகள் கொண்ட மருத்துவமனை வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இறுதிக்கட்ட பணிகளை கலெக்டர் ேஷக் அப்துல் ரகுமான் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

பணிகள் குறித்து மாவட்ட மருத்துவ நலப்பணி இணை இயக்குநர் ரமேஷ்பிரபு, மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் முரளிஸ்ரீ, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜவேல் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

ஆய்வுக்கு பின் கலெக்டர் கூறுகையில், 'மருத்துவமனையின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. வரும் மே 15ம் தேதிக்குள் பணிகள் முடிந்துவிடும். மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ பணியாளர்கள், ஊழியர்கள் திறப்பு விழாவிற்கு முன்னதாக முறைப்படி அரசு மூலம் தேர்வு செய்யப்படுவர்' என்றார்.

திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், தாசில்தார் சிவா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us