sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முதல்வர் பங்கேற்கும் அரசு விழா முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு

/

முதல்வர் பங்கேற்கும் அரசு விழா முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு

முதல்வர் பங்கேற்கும் அரசு விழா முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு

முதல்வர் பங்கேற்கும் அரசு விழா முன்னேற்பாடுகளை கலெக்டர் ஆய்வு


ADDED : ஜன 24, 2025 06:47 AM

Google News

ADDED : ஜன 24, 2025 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில், முதல்வர் பங்கேற்க உள்ள விழா மேடை பணியை, கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில், வரும் 27, 28 தேதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், வரும் 27 ம் தேதி மாலை நடைபெறும் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தலைவரான முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

அன்று இரவு விழுப்புரத்தில் தங்குகிறார். மறுநாள் காலை 9:00 மணிக்கு விழுப்புரம் வழுதரெட்டியில், அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவு அரங்கம், சமூக நீதி போராளிகளின் மணி மண்டபத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து நடைபெறும் விழாவில், பல்வேறு துறைகள் சார்பில், பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

இதையொட்டி, வழுதரெட்டியில் அரசு நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணியை, கலெக்டர் பழனி நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவு அரங்கம், 21 சமூக நீதி போராளிகளின் மணி மண்டபம் மற்றும் நினைவு அரங்க வளாகத்தில் உள்ள நுாலகத்தை பார்வையிட்டார்.

ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மணிமாறன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us