sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வளமிகு வட்டார வளர்ச்சி  திட்டம் கலெக்டர் தலைமையில் ஆய்வு

/

வளமிகு வட்டார வளர்ச்சி  திட்டம் கலெக்டர் தலைமையில் ஆய்வு

வளமிகு வட்டார வளர்ச்சி  திட்டம் கலெக்டர் தலைமையில் ஆய்வு

வளமிகு வட்டார வளர்ச்சி  திட்டம் கலெக்டர் தலைமையில் ஆய்வு


ADDED : ஜூன் 07, 2025 01:52 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் மேல்மலையனுார் வட்டாரங்களில் வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். தமிழக அரசு வளமிகு வட்டார வளர்ச்சி ஏற்படுத்த, மாநிலம் முழுவதும் 50 வட்டாரங்களை தேர்வு செய்து, ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக 50 குறியீடுகள் தேர்வு செய்து, அதில் ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி, சமூக நலன், வேளாண்மை, வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு ஆகிய 7 கருப்பொருள் வகைப்படுத்தபட்டுள்ளது.

பின்தங்கிய வட்டாரங்களில், மாவட்ட குறியீடுகளுக்கு இணையாகவும், பிறகு மாநில குறியீடுகளுக்கு இணையாக உயர்த்த வேண்டும் என்கிற வகையில், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், திருவெண்ணெய்நல்லுார் மற்றும் மேல்மலையனுார் வட்டாரங்களில், 2025-26ம் ஆண்டிற்கு வளர்ச்சித் திட்டங்களை தேர்வு செய்வதுதொடர்பாக ஆய்வு கூட்டம்நடந்தது.

மாவட்ட மற்றும் வட்டார வளர்ச்சி குறியீடுகளின் அடிப்படை மதிப்பீடு குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் சப் கலெக்டர் திவ்யான்ஷி நிகம், திட்டக்குழு அலுவலர் நடராஜன், புள்ளியல்அலுவலர் முத்துக்குமரன் உட்பட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us