/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நல்லாப்பாளையத்தில் கலெக்டர் பழனி ஆய்வு
/
நல்லாப்பாளையத்தில் கலெக்டர் பழனி ஆய்வு
ADDED : பிப் 21, 2024 10:32 PM

கண்டாச்சிபுரம் : நல்லாப்பாளையம் ஊராட்சியில் விழுப்புரம் கலெக்டர் உங்களைத்தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
விக்கிரவாண்டி தாலுகா நல்லாப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கடந்த சில வாரங்களாக அகற்றப்பட்டது.
தற்போது அரசு நிலத்தில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் முன்னிலை வகித்தார். பின்னர் உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.
மேலும் நல்லப்பாளையம் பகுதி மக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் பழனி பெற்றுக்கொண்டார்.இதில் மாவட்ட சேர்மேன் ஜெயச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன்,காணை ஒன்றியசேர்மேன் கலைச்செல்வி, விக்கிரவாண்டி தாசில்தார் யுவராஜ், ஊராட்சித்தலைவர் நித்யா கதிரசரன்,ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.