/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் மீது ஸ்கூட்டர் மோதல் கல்லுாரி மாணவர் பலி
/
பஸ் மீது ஸ்கூட்டர் மோதல் கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஏப் 16, 2025 09:35 AM
திண்டிவனம் : திண்டிவனத்தில் தனியார் பஸ் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் கல்லுாரி மாணவர் உயிரிழந்தார். 2 மாணவர்கள் காயமடைந்தனர்.
திண்டிவனம் சிங்கனுார், காமராஜர் காலனி சுரேஷ் மகன் தருஷ், 18; கோவிந்தசாமி அரசு கல்லுாரியில் பி.காம்., முதலாம் ஆண்டு மாணவர்.
அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஷர்ஷத் மேத்தா, 18; அரசு கல்லுாரி பி.ஏ., முதலாம் ஆண்டு மாணவர்.
செஞ்சி பாலிடெக்னிக் டிப்ளமோ மாணவர் லோகநாதன் மகன் பிரவீன், 18; மூவரும் நேற்று காலை 9:15 மணிக்கு, ஸ்கூட்டரில் சிங்கனுாரிலிருந்து கல்லுாரிக்கு சென்றனர். தருஷ் வாகனத்தை ஓட்டி சென்றார்.
திண்டிவனம் சாலையில் சென்றபோது, மயிலம் சாலையோரம் உள்ள மெக்கானிக் ெஷட்டிலிருந்து வெளியே வந்த தனியார் பஸ் மீது ஸ்கூட்டர் மோதியது.
இதில், மூன்று மாணவர்களும் திண்டிவனம் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் தருஷ் வழியிலேயே இறந்துவிட்டார்.
காயமடைந்த பிரவீன் ஜிப்மர் மருத்துமனைக்கும், ஹர்ஷத்மேத்தா திண்டிவனம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

