sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டிப்பர் லாரி மோதி கல்லுாரி மாணவர் பலி

/

டிப்பர் லாரி மோதி கல்லுாரி மாணவர் பலி

டிப்பர் லாரி மோதி கல்லுாரி மாணவர் பலி

டிப்பர் லாரி மோதி கல்லுாரி மாணவர் பலி


ADDED : அக் 26, 2024 07:37 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: மரக்காணம் அருகே கல்குவாரியில் வேலை செய்த கல்லுாரி மாணவர், டிப்பர் லாரி மோதி இறந்தார்.

மரக்காணம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் பரமசிவம், 19; இவர் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லுாரியில் பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், இரவு நேரம் மற்றும் விடுமுறை நாட்களில் உப்புவேலுார் சாலையில் உள்ள ஸ்ரீவாரி கல்குவாரியில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் குவாரியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, டிப்பர் லாரியை வெள்ளகுளத்தை சேர்ந்த டிரைவர் தணிகாசலம், 37; பின் நோக்கி எடுத்தபோது, பரமசிவம் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த பரமசிவம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.

பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us