நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: அரசு கல்லுாரி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த கொட்டப்பாக்கத்துவெளி கிராமத்தை சேர்ந்த குப்பன் மகன் காவ்யா,19; இவர், விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ., மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
கடந்த 11ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.