ADDED : செப் 05, 2025 07:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி; கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
விக்கிரவாண்டி மெயின்ரோட்டை சேர்ந்த சர்தார் என்பவரது மகள் ஷர்மிளா,19: விழுப்புரம் அரசு எம்.ஜி.ஆர்., மகளிர் கலை கல்லுாரியில் சமூக பணி படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 2 ம் தேதி கல்லுாரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க வில்லை. விக்கிரவாண்டி போலீசில் தந்தை சர்தார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர் .