ADDED : அக் 14, 2024 08:28 PM

அ நிறம் | அளவு
நாய் தொல்லையால் அச்சம்
விழுப்புரம், தேவநாத சுவாமி நகர் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
- சதீஷ், விழுப்புரம்
பள்ளிகளுக்கு வாயில் கேட் தேவை
அவலுார்பேட்டையில் உள்ள துவக்கப் பள்ளிகளில் வாயில் கேட் இல்லாததால் இரவில் குடிபிரியர்கள் பள்ளி வளாகத்தில் மது அருந்துகின்றனர்.
- சீராளன், அவலுார்பேட்டை
கழிவுகள் தேங்கி துர்நாற்றம்
விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியில் செல்லும் கோலியனுாரான் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து துர்நாற்றம் வீசுகிறது.
-மோகன், விழுப்புரம்.
குடிநீர் சீராக கிடைக்குமா?
மேல்மலையனுார் அடுத்த கடப்பனந்தல் மேட்டுத் தெருவில் மேடான பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் சப்ளை கிடைப்பதில்லை.
-வெங்கடாசலம், கடப்பனந்தல்.
இருளில் மூழ்கிய சாலை
மேல்மலையனுார் அடுத்த கோவில்புரையூர் - தோப்பு கிராமத்திற்குச் செல்லும் வழியில் மின் விளக்குகள் இன்றி இரவு நேரங்களில் இருளில் மூழ்கியுள்ளது.
- வெங்கட்தாஸ், கோ.தோப்பு.
