ADDED : செப் 03, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: தேசத்திற்கான சமரச தீர்வு திட்டம், 3.0 விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் ஒருங்கிணைந்த கோர்ட்வளாகத்தில், தேசத்திற்கான சமரச தீர்வு திட்டம் 3.0 விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி, பேரணியை துவக்கி வைத்தார். இதில், சமரச தீர்வு திட்டம் 3.0, வின் படி வழக்குகள் சமரசம் செய்ய கடந்த ஆக., 1 முதல் வரும் 30ம் தேதி வரை விருப்பம் தெரிவிக்க நடைமுறையில் உள்ளது. இதை தொடர்ந்து வரும் அக்., 1 முதல் டிச., 31ம் தேதி வரை சமரச தீர்வு நடக்கிறது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
