sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

/

கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 06, 2025 11:56 PM

Google News

ADDED : அக் 06, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில ஓய்வுபெற்றோர் சங்க பொருளாளர் கலியபெருமாள், மாவட்ட செயலாளர் அனந்தசயனன், பொருளாளர் மூர்த்தி முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடிகளுக்கு தனித்தனியாக பி.ஓ.எஸ்., இயந்திரம் வழங்கப்படுவதுடன், விற்பனையாளர்களுக்கு மொபைல் போன் வாங்கித் தர வேண்டும். விற்பனையாளர்களாக பணியில் சேருபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட 25 கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த வேலை நிறுத்தத்தால், மாவட்டத்தில் உள்ள 152 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூடப்பட்டது.

அதில் பணிபுரிந்த சங்க பணியாளர்கள் 622 பேர் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் 1160 பேர் என மொத்தம் 1782 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால், மாவட்டத்தில் நகைக்கடன் வழங்குவது, ஜாதி, இருப்பிடம், வருவாய் சான்றிதழ் வழங்குவது, ரேஷன் கடைகளில் பொது விநியோகம் உள்ளிட்ட பணிகள் முற்றிலும் முடங்கியது.






      Dinamalar
      Follow us