ADDED : ஆக 20, 2026 03:20 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: மின் மோட்டார் காப்பர் ஒயரை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த தென்னமாதேவியை சேர்ந்தவர் காசிநாதன், 65; இவரது நிலத்தில் உள்ள கிணற்றில் மின் மோட்டாருக்கு இணைத்திருந்த, 50 மீ., காப்பர் ஒயரை கடந்த, 16ம் தேதி மர்மநபர் திருடிச்சென்றார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில், விழுப்புரம் ஆசாகுளத்தை சேர்ந்த பாபு, 40; என்பவர் ஒயரை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, பாபுவை போலீசார் கைது செய்து ஒயரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
