sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மளிகை கடைக்காரருக்கு  20 ஆண்டு சிறை சிறுமி பாலியல் வழக்கில் கோர்ட் தீர்ப்பு

/

மளிகை கடைக்காரருக்கு  20 ஆண்டு சிறை சிறுமி பாலியல் வழக்கில் கோர்ட் தீர்ப்பு

மளிகை கடைக்காரருக்கு  20 ஆண்டு சிறை சிறுமி பாலியல் வழக்கில் கோர்ட் தீர்ப்பு

மளிகை கடைக்காரருக்கு  20 ஆண்டு சிறை சிறுமி பாலியல் வழக்கில் கோர்ட் தீர்ப்பு

2


ADDED : ஜன 23, 2025 02:08 AM

Google News

ADDED : ஜன 23, 2025 02:08 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:விக்கிரவாண்டி அருகே சிறுமி பலாத்கார வழக்கில் மளிகை கடைக்காரருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் சிறப்பு கோர்ட் தீர்ப்பு கூறியது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த சாத்தனுாரை சேர்ந்தவர் நஷீர்பாஷா, 42; மளிகை கடை நடத்தி வந்தார்.

அந்த கடைக்கு கடந்த 5.11.2017ம் தேதி பொருள் வாங்க வந்த 8 வயது சிறுமியை, நஷீர்பாஷா வீட்டிற்குள் அழைத்துசென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர்போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, நஷீர்பாஷாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரித்து வந்த நீதிபதி வினோதா, குற்றவாளியான நஷீர்பாஷாவுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு, ரூ.5 லட்சம் அரசு தரப்பில் வழங்கவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், நஷீர்பாஷாவை கடலுார் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us