/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மேம்பாலத்தில் விரிசல் வாகன ஓட்டிகள் 'திக் திக்'
/
விழுப்புரம் மேம்பாலத்தில் விரிசல் வாகன ஓட்டிகள் 'திக் திக்'
விழுப்புரம் மேம்பாலத்தில் விரிசல் வாகன ஓட்டிகள் 'திக் திக்'
விழுப்புரம் மேம்பாலத்தில் விரிசல் வாகன ஓட்டிகள் 'திக் திக்'
ADDED : ஜன 20, 2026 04:42 AM

விழுப்புரம்: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
விழுப்புரம் அருகே, ஜானகிபுரத்தில், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைக்கான புறவழிச்சாலை துவங்குகிறது.
இங்கு, சென்னை - திருச்சி மார்க்கத்திற்கு ஒரு மேம்பாலமும், நாகப்பட்டினம் மார்க்கத்திற்கு ஒரு மேம் பாலமும், விழுப்புரம் - திருச்சி மார்க்கத்திற்கு ஒரு மேம்பாலமும் கட்டப்பட்டுள்ளன.
இந்த மேம்பாலங்கள் வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், சென்னை - திருச்சி மார்க்க மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் போடப்பட்டுள்ள, 'கான்கிரீட் டெக்'கில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த விரிசல் பகுதி மீது, டூ - வீலரில் பயணிப்போர், நிலை தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்கவும், பாலத்தின் தரத்தை உறுதிப்படுத்தவும் வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

