தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : ஆக 15, 2026 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 15, 2026 03:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்காதல்: ஒருவர் கைது

விக்கிரவாண்டி அடுத்த வெட்டுக்காட்டைச் சேர்ந்தவர் பாஸ்கர், 30; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி ராஜேஸ்வரி பிரிந்து சென்ற நிலையில் இவர் அதே பகுதியில் திருமணமான பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருந்தார்.

இதனை அறிந்து அந்த பெண்ணின் அண்ணன் வடிவேல், பாஸ்கரை பலமுறை கண்டித்தும் கேட்காததால் நேற்று முன்தினம் பாஸ்கரை தாங்கினார். பாஸ்கர் கொடுத்த புகாரின் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து வடிவேலை, 30; கைது செய்தனர்.

துாக்குப்போட்டு கணவர் தற்கொலை

புதுச்சேரி மாநிலம், கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், 47; குடிப்பழக்கமுடைய இவர், நரம்பு தளர்ச்சியால் பாதித்து சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் மது குடித்ததால் அவரது மனைவி வாசுகி, 43; கண்டித்தார். இதனால், மனமுடைந்த பார்த்திபன், விழுப்புரம், பூந்தோட்டம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தவர் அங்கு துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

வயிற்று வலி: ஒருவர் தற்கொலை

விழுப்புரம், மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத், 41; விழுப்புரத்தில் பொக்லைன் கம்பெனியில் ஏரியா மேலாளராக பணிபுரிந்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.



வாலிபரை தாக்கியவர் கைது

விழுப்புரம் அடுத்த தெளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரன், 28; இவர், கடந்த 11ம் தேதி மொபைல் போனில் பொதுவாக திட்டி கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த இளையபெருமாள், 47; தன்னைத்தான் திட்டுகிறார் என நினைத்து தகராறு செய்து ரவீந்திரனை தாக்கினார். புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து இளையபெருமாளை கைது செய்தனர்.

கணவருடன் தகராறு: மனைவி தற்கொலை

விக்கிரவாண்டி அடுத்த சிவபெருமான் பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரன் மனைவி ரேவதி, 40; கூலித் தொழிலாளி. சந்திரன் தினமும் மது குடித்து விட்டு வந்ததால் தம்பதிக்கிடையே தகராறு நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாலை சந்திரன் குடித்து விட்டு வந்ததால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரேவதி புடவையால் துாக்குப்போடடு தற்கொலை செய்து கொண்டார். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us