ADDED : செப் 12, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலையில் நடந்த சென்ற பெண்ணிடம், நகையை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், வண்டிமேடு வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன், 30; மெடிக்கல் வைத்துள்ளார். இவரது மனைவி நித்யா, 28; இவர், நேற்று முன்தினம் காலை, வீட்டிலிருந்து அருகே உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்றார்.
பைரவர் வீதி அருகே வந்தபோது, எதிரே பைக்கில் வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், நித்யா அணிந்திருந்த ஐந்தரை சவரன் செயினை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பினார்.
புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
