sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிரைம் செய்திகள்...

/

கிரைம் செய்திகள்...

கிரைம் செய்திகள்...

கிரைம் செய்திகள்...


ADDED : நவ 16, 2024 05:02 AM

Google News

ADDED : நவ 16, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூதாட்டி மாயம்: போலீஸ் விசாரணை


கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சி சேர்ந்தவர் போஜன் மனைவி செல்லம்மாள், 69; இவர், கடந்த 10 ம் தேதி மருத்துவமனைக்கு சென்று வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சூதாடிய 6 பேர் கைது


ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் விட்லாபுரம் ஏரிக்கரையில் ரோந்து சென்றனர். அங்கு, பணம் வைத்து சூதாடிய சலவாதி மாரி, 32; மொளசூர் முருகன், 45; வடநெற்குணம் பூபாலன், 35; மேல்பேராவூர் முருகன், 32; கிடங்கல் சதீஷ், 41; வந்தவாசி அய்யப்பன், 38; ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

பஸ் மோதி ஒருவர் பலி


மயிலம் அடுத்த செண்டூரில் நேற்று காலை 11:00 மணியளவில் ஆம்னி பஸ் திருச்சி நோக்கி சென்றபோது, சாலையில் நடந்து சென்ற 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த விபத்தில் அந்த நபர் இறந்தார். இறந்த நபர் பிங்க் கலரில் நீலம், கருப்பு கோடு போட்ட சட்டையும் காக்கி பேண்ட்டும் அணிந்திருந்தார். மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லாட்டரி விற்ற 4 பேர் கைது


விழுப்புரம், வழுதரெட்டி பகுதியில் தாலுகா சப் இன்ஸ்பெக்டர்கள் குணசேகர், முரளி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வழுதரெட்டி பகுதியில் ஆன் லைன் லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியைச் சேர்ந்த குமார், 38; ராஜசேகர், 35; கண்டமானடியில் ஆன்லைன் லாட்டரி விற்ற வி.மருதுார் ஞானசேகர், 32; கண்ணன், 32; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

பைக் விபத்தில் ஒருவர் சாவு


புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 42; இவர் கடந்த 10ம் தேதி, திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரிக்கு, பேஷன் புரோ பைக்கில் சென்றார். ஆண்டியார்பாளையம் ஆர்.டி.ஓ., செக்போஸ்ட் அருகே முன்னால் சென்ற கார் மீது மோதியதில் பிரேம்குமார் படுகாயமடைந்தார். ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சேலையில் தீ பிடித்து மூதாட்டி பலி


கிளியனுார் அடுத்த உப்புவேலுார் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி காந்தாமணி, 73; இவர், கடந்த 8ம் தேதி அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் அகல் விளக்கு ஏற்றும் போது அவரது புடவையில் தீ பிடித்தது. படுகாயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று அதிகாலை இறந்தார். கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வாகனம் மோதி ஒருவர் பலி


ஒலக்கூர் அருகே வீடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 44; இவர், கடந்த 13ம் தேதி மேல்மருவத்துாருக்கு மொபட்டில் சென்று, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். ஒலக்கூர் அருகே வந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில், தலையில் காயமடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us