sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிரைம் செய்திகள்...

/

கிரைம் செய்திகள்...

கிரைம் செய்திகள்...

கிரைம் செய்திகள்...


ADDED : ஏப் 04, 2025 04:31 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணை தாக்கியவர் கைது


விழுப்புரம் அடுத்த சத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேல் மகன் கிருஷ்ணராஜ், 24; பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பாபு மகள் மீரா, 22; இவர், கடந்த 3 மாதங்களுக்க முன் கிருஷ்ணராஜிடம் 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை திருப்பி தராததால், கடந்த 30ம் தேதி, மீராவிடம் கடன் பணத்தை திருப்பிகேட்டு, கிருஷ்ணராஜ் திட்டி, தாக்கினார். மீரா கொடுத்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து, கிருஷ்ணராஜை கைது செய்தனர்.

சிறுமி மாயம்: பெற்றோர் புகார்


வானுார் அடுத்த நரையூரைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரது 16 வயது மகள் மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். இவரை கடந்த 31ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

மனைவிக்கு கொடுமை கணவர் மீது வழக்கு


விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கம் சரண்ராஜ் மனைவி சர்மிளா, 23; இவர்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு திருமணமாகியது. குழந்தை இல்லை. இதனால் கணவர் மற்றும் மாமியார் முத்துலட்சுமி, மாமனார் சங்கர், இவரின் மகள் ஜமுனா ஆகியோர் சேர்ந்து சர்மிளாவை திட்டி, கொடுமைபடுத்தியுள்ளனர். மனமுடைந்த சர்மிளா, கடந்த 31ம் தேதி வீட்டில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து சர்மிளா தாய் பிரமிளா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் சரண்ராஜ் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மகள் மாயம்: தந்தை புகார்


விழுப்புரம், பானாம்பட்டு முருகன் மகள் ஆர்த்தி, 23; பி.காம்., பட்டதாரி. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற ஆர்த்தி மீண்டும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. இவரின் தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

முதியவர் சாவு: போலீஸ் விசாரணை


சேலம் மாவட்டம், கனவாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன், 60; கடந்த ஒரு ஆண்டிற்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய இவர், கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு அய்யனாரப்பன் கோவிலில் யாசகம் பெற்று வந்துள்ளார். நேற்று காலை பார்த்தபோது அவர் வழக்கம்போல் தங்கும் இடத்தில் இறந்து கிடந்தார். கோட்டக்குப்பம் போலீசார், உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மது பாட்டில் விற்றவர் கைது


மலையரசன்குப்பம் ஊராட்சியில் கண்டாச்சிபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி, 68; தனது வீட்டில் மது பாட்டில் விற்றது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து 35 புதுச்சேரி பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மாணவி மாயம்: போலீஸ் விசாரணை


விழுப்புரம் அடுத்த ப.வில்லியனுாரைச் சேர்ந்த சரவணன் மகள் அஷ்டலட்சுமி, 21; இவர், திருச்சியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 1ம் தேதி, வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us