ADDED : செப் 07, 2011 10:51 PM
கடலூர்:தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் புதிய
நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர் கழக மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் கடலூர் நகராட்சி மேல்நிலைப்
பள்ளியில் நடந்தது.மாவட்டத் தலைவர் நூர்பாஷா தலைமை தாங்கினார்.
பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்டச் செயலர் உதயகுமார்சாம் நன்றி
கூறினார்.புதிய பொறுப்பாளர்கள் தேர்தல் நடந்தது. அதில் தலைவராக
ராஜேந்திரன், செயலராக உதயகுமார்சாம், பொருளாளராக உத்திராபதி, அமைப்புச்
செயலராக சித்தார்த்தன், துணைத் தலைவர்களாக சுப்ரமணியன், நமச்சிவாயம், இணைச்
செயலர்களாக வெங்கடாஜலபதி, தமிழ்ச்செல்வன், மகளிர் அணி செயலர்
தமிழ்ச்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.கடலூர் கல்வி மாவட்டத்
தலைவராக கோவிந்தராஜ், செயலராக ஹரிமூர்த்தி, விருத்தாசலம் கல்வி மாவட்ட
தலைவராக மாயவேல், செயலராக சேகர், மண்டல செயலராக ராஜதுரை ஆகியோர் தேர்வு
செய்யப்பட்டனர்.