sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மருமகள் கைது

/

மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மருமகள் கைது

மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மருமகள் கைது

மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மருமகள் கைது


ADDED : நவ 16, 2024 11:18 PM

Google News

ADDED : நவ 16, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த என்.ஆர்.பாளையம் காலனியைச் சேர்ந்தவர் பாண்டியன், 43. இவரது மனைவி ரமணி, 38. இவர்களுக்கு கருணாமூர்த்தி, 22, தட்சணாமூர்த்தி, 20, என, இரு மகன்கள் உள்ளனர்.

கருணாமூர்த்தி தன்னுடன் கல்லுாரியில் படித்த சுவேதா, 22, என்பவரை காதலித்து ஜூலை 12ல் திருமணம் செய்தார்.

கருணாமூர்த்தி செங்கல்பட்டில் தங்கி, தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்தார். பாண்டியன் வெளியூரில் வேலை செய்து வந்தார்.

தட்சணாமூர்த்தி கடலுாரில் உறவினர் வீட்டில் தங்கி கல்லுாரியில் படித்து வந்தார். வீட்டில் ரமணி, சுவேதா வசித்தனர். அக்., 30ம் தேதி, ரமணி தீக்காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 31ம் தேதி இறந்தார்.

தாய் சாவில் சந்தேகம் இருப்பதாக, தட்சணாமூர்த்தி புகார் அளிக்க, கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்தனர். சுவேதா நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், சுவேதா, ஆண் நண்பருடன் சேர்ந்து, ரமணியை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தெரிவித்தார்.

சுவேதா, எதிர் வீட்டை சேர்ந்த ஆண் நண்பர் சதீஷ்குமார், 27, நேற்று மாலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சுவேதா அளித்த வாக்குமூலம்:

கல்லுாரியில் படிக்கும் போதே சில ஆண் நண்பர்களுடன் தவறான பழக்கம் இருந்தது. திருமணத்திற்கு பின், கணவர் வெளியூரில் தங்கினார்.

இரு மாதங்களுக்கு முன் சதீஷ்குமாருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ரமணி கூலி வேலைக்கு சென்று மாலை வீடு திரும்புவார். சில நேரங்களில் இரவு வெளியூரில் தங்கி விடுவார்.

இந்த நேரத்தில், நானும், சதீஷ்குமாரும் உல்லாசமாக இருப்போம். சம்பவத்திற்கு சில நாட்கள் முன் வீட்டில் நாங்கள் உல்லாசமாக இருந்ததை ரமணி நேரில் பார்த்தார். என்னிடம் கடுமையாக பேசி, என் கணவரிடம் கூறிவிடுவதாக மிரட்டினார்.

இதனால், நானும், சதீஷ்குமாரும் திட்டமிட்டு, அக்., 30ம் தேதி, துாக்க மாத்திரைகளை பவுடராக்கி பிரைடு ரைசில் கலந்து ரமணிக்கு கொடுத்தோம்.

சிறிது நேரத்தில் அவர் துாங்கியதும், உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்தோம். அவர் மீது தீப்பற்றியதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இவ்வாறு கூறியுள்ளார்.

திருமணமான மூன்றே மாதங்களில் கள்ளத்தொடர்பால் மாமியாரை, மருமகள் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us