ADDED : செப் 29, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: மகளைக் காணவில்லை என தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த அய்யனம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு மகள் அகிலா, 24; பட்டதாரி. இவர், நேற்று முன்தினம் கடைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.