ADDED : பிப் 13, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் மயங்கி கீழே விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
செஞ்சி அருகே மாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் பக்ரின் மொய்தீன் மனைவி பசிராபி,75; இவர், கடந்த 21ம் தேதி விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் நடந்து சென்ற போது மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அங்கிருந்த சிலர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார்.
விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.