sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

'மாஜி' அமைச்சர் மீதான அவதுாறு வழக்குகள்: விசாரணை ஒத்திவைப்பு

/

'மாஜி' அமைச்சர் மீதான அவதுாறு வழக்குகள்: விசாரணை ஒத்திவைப்பு

'மாஜி' அமைச்சர் மீதான அவதுாறு வழக்குகள்: விசாரணை ஒத்திவைப்பு

'மாஜி' அமைச்சர் மீதான அவதுாறு வழக்குகள்: விசாரணை ஒத்திவைப்பு


ADDED : பிப் 13, 2024 04:37 AM

Google News

ADDED : பிப் 13, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் சண்முகம் மீதான 5 அவதுாறு வழக்குகளின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் மற்றும் கோட்டக்குப்பத்தில் கடந்தாண்டு நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகம் பேசுகையில், தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் அவதுாறாக பேசியதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் சுப்ரமணியம் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், அதன் உத்தரவு வரும் வரை வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரினர். அதனையேற்ற நீதிபதி பூர்ணிமா, வழக்குகளின் விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதேபோல், கடந்த 2022ல் விழுப்புரம் மற்றும் திருச்சிற்றம்பலத்தில் நடந்த மூன்று அ.தி.மு.க., பொதுக்கூட்டங்களில் தமிழக அரசு மற்றும் முதல்வர் குறித்து அவதுாறாக பேசிய சண்முகம் மற்றும் சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆகியோர் மீது விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த 3 வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் இவ்வழக்குகளை விசாரிக்க சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு நகல் பெற்று தர கால அவகாசம் கோரினர். அதனையேற்ற நீதிபதி ராதிகா, வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.






      Dinamalar
      Follow us