நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: சாலை பணியை துவங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விக்கிரவாண்டி அடுத்த கயத்துாரைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கயத்துாரில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மேற்கொண்டு நிறுத்தப்பட்ட பேவர் பிளாக் சாலை பணியை துவக்க வேண்டும்.
கால தாமதம் செய்தால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் கோஷம் எழுப்பினர். அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின், இக்கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

