sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

புதிய புறவழிச் சாலை பணியின்போது சேதமான அய்யனார் கோவில் சுற்று சுவர் விபத்து நடப்பதால் பக்தர்கள் அச்சம்

/

புதிய புறவழிச் சாலை பணியின்போது சேதமான அய்யனார் கோவில் சுற்று சுவர் விபத்து நடப்பதால் பக்தர்கள் அச்சம்

புதிய புறவழிச் சாலை பணியின்போது சேதமான அய்யனார் கோவில் சுற்று சுவர் விபத்து நடப்பதால் பக்தர்கள் அச்சம்

புதிய புறவழிச் சாலை பணியின்போது சேதமான அய்யனார் கோவில் சுற்று சுவர் விபத்து நடப்பதால் பக்தர்கள் அச்சம்


ADDED : ஆக 12, 2025 02:43 AM

Google News

ADDED : ஆக 12, 2025 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வி ழுப்புரம் அருகே பைபாஸ் பணியின்போது சேதமடைந்த அய்யனார் கோவில் சுற்று சுவரை, கட்டித்தர வேண்டுமென கிராமத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த வி.கொளத்துார் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கிராமத்தின் எல்லை பகுதியில் பழமை வாய்ந்த அய்யனார் கோவில் உள்ளது. பிரமாண்ட சுவாமி சிலைகளும், சுற்று சுவர் வசதியுடன் இருந்த இந்த கோவில் வழியாக விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலைக்கான புறவழிச் சாலை அமைத்தனர்.

அப்போது, இக்கோவிலின் சுற்றுசுவரை இடித்துவிட்டு சாலை பணிகள் நடந்தது. சாலை பணிகள் முடிந்து நான்கு வழிச்சாலை பயன்பாட்டில் உள்ளது.

ஆனால், தேசிய நெடுஞ்சாலை துறையினர் இடித்துவிட்டுச் சென்ற கோவில் சுற்று சுவரை கட்டித் தரப்படவில்லை.

இந்த சாலை பணியின்போது, புதிதாக கோவில் சுற்றுசுவர் அமைத்து தருவதாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் உறுதியளித்திருந்தபோதும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

நான்கு வழிச்சாலையின் மிக ஓரமாக இந்த கோவில் உள்ளதால், அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால், அய்யனார் கோவிலுக்கு வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த மாதம், அதிவேகமாக வந்த ஒரு லாரி கோவில் சுவற்றை உடைத்துக்கொண்டு உள்ளே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி, அய்யனார் கோவிலுக்கு சுற்றுசுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, கோவில் நிர்வாகி ரமேஷ் உள்ளிட்டோர் தேசிய நெடுஞ்சாலை துறை, கலெக்டருக்கும் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us