ADDED : ஆக 01, 2025 03:08 AM

விழுப்புரம்: அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தினமலர் வழங்கும் 'பட்டம்' இதழ், மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு, தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் அரசின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கும், மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் விரிவான தகவல்களை வழங்கி வருகிறது.
பள்ளி மாணவர்களுக்காக இந்த சிறப்பிதழ், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வெளியாகிறது. ஆண்டு தோறும் மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டிகளையும் நடத்தி ஊக்கப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில், சரஸ்வதி கல்வி குழுமம் சார்பில் 'தினமலர் -பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் யமுனாபாய் தலைமை தாங்கினார். ஆசிரியர் இந்திரா வரவேற்றார். சரஸ்வதி கல்வி குழும தாளாளர் குணசேகர், பொருளாளர் சிதம்பரநாதன், சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் முத்துசரவணன் ஆகியோர், மாணவர்களுக்கு பட்டம் இதழ்களை வழங்கி, அதன் சிறப்புகளை விளக்கி பேசினர். ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.