ADDED : ஆக 06, 2025 11:22 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு 'தினமலர் -பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாணவர்களுக்கு பொது அறிவு திறனை மேம்படுத்தவும், விஞ்ஞான வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், வாசிப்பு திறனை அதிகரிக்கும் வகையிலும், அரசின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை தயார் படுத்தும் விதத்தில் விரிவான தகவல்கள் ' தினமலர் -பட்டம்' இதழ் மூலம் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் ஆர்வமுடன் பட்டம் இதழை படித்து பயன்பெறுகின்றனர்.
இந்நிலையில், விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். ஆசிரியர் அய்யனார் வரவேற்றார். பேரூராட்சி மன்ற சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி ஆகியோர் மாணவர்களுக்கு இதழ்களை, வழங்கி பேசினர். பேரூராட்சி மன்ற கவுன்சிலர் ரமேஷ் , ஆசிரியர்கள் வேல்முருகன், பழனிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.