ADDED : ஆக 14, 2025 11:42 PM

விழுப்புரம்: அன்னியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தினமலர் சார்பில், மாணவர்களின் அறிவு திறனை வளர்க்கும் 'பட்டம்' இதழ் வெளியாகிறது. இந்த சிறப்பிதழ், பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு, அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் அரசின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கும், மாணவர்களை தயார்படுத்தும் விதத்தில், விரிவான தகவல்களை வழங்கி வருகிறது.
இந்த சிறப்பிதழ், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வெளியாகிறது. இதன் மூலம், மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டிகளையும் நடத்தி ஊக்கப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அன்னியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், விழுப்புரம் சரஸ்வதி கல்வி குழுமம் சார்பில், பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஏஞ்சலின் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் மகேஸ்வரி வரவேற்றார். விழுப்புரம் சரஸ்வதி கல்வி குழும தாளாளர் ராஜசேகரன், பொருளாளர் சிதம்பரநாதன், சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் முத்துசரவணன் ஆகியோர், பள்ளி மாணவர்களுக்கு பட்டம் இதழ்களை வழங்கி, அதன் சிறப்புகளை விளக்கி பேசினர். ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.