/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி
/
புதுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி
புதுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி
புதுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' வினாடி-வினா போட்டி
ADDED : ஜன 26, 2025 05:20 AM

வானூர் : வானூர் அடுத்த புதுக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில், புதுச்சேரி 'தினமலர்-பட்டம்' இதழ், ஆச்சர்யா கல்விக்குழுமம் இணைந்து பதில் சொல் பரிசு வெல் வினாடி-வினா போட்டி நடந்தது.
போட்டியில் 16 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இவர்களை 8 குழுக்களாக பிரித்து இரு சுற்றுகளாக போட்டி நடந்தது. இதில், ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் கனிமொழி, விஜயலட்சுமி ஆகியோர் முதலிடத்தையும், 8ம் வகுப்பு மாணவர் மாதேஷ், 7ம் வகுப்பு மாணவி பவித்ரா ஆகியோர் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கேடயம், பதக்கம் மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் குமரவேல் தலைமை தாங்கினார். புதுக்குப்பம் ஊராட்சி தலைவர் வேலு (எ) வேலன் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு கேடயம், பதக்கம் மற்றும் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
விழாவில் உதவி தலைமையாசிரியர் ஏழுமலை, ஆசிரியர்கள் காயத்ரி, கவிதா, எஸ்.கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

