/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிணற்றில் விழுந்த சிறுவன் பரிதாப பலி
/
கிணற்றில் விழுந்த சிறுவன் பரிதாப பலி
ADDED : ஜூலை 19, 2011 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் இறந்தார்.சங்கராபுரம் அடுத்த தொழுவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் மகன் பிரதீப்,14.
பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். பிரதீப் நேற்று முன்தினம் அதே ஊரில் புஷ்பம்மாள் என்பவருக்கு சொந்தமான கிணற் றுக்கு குளிக்க சென்றான். அப்போது தவறி விழுந்த பிரதீப் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு அலுவலர் செல்வராஜ் தலை மையிலான வீரர்கள் விரைந்து சென்று பிரதீப் உடலை மீட்டனர்.dinamalar villupuram district news