sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

உணவு உற்பத்தி குழுவில் புதியவர்களுக்கு வாய்ப்பு :விவசாயிகள் கோரிக்கை

/

உணவு உற்பத்தி குழுவில் புதியவர்களுக்கு வாய்ப்பு :விவசாயிகள் கோரிக்கை

உணவு உற்பத்தி குழுவில் புதியவர்களுக்கு வாய்ப்பு :விவசாயிகள் கோரிக்கை

உணவு உற்பத்தி குழுவில் புதியவர்களுக்கு வாய்ப்பு :விவசாயிகள் கோரிக்கை


ADDED : ஆக 22, 2011 12:27 AM

Google News

ADDED : ஆக 22, 2011 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் மணிமேகலை தலைமையில் விழுப்புரத்தில் நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,வெங்கடாஜலம், மண்டல இணை பதிவாளர் பாலகிருஷ்ணன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நவ்ஷாத், சர்க்கரை ஆலை தனி அலுவலர் சிவமலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சக்கரவர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் உரத் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். உளுந்தூர்பேட்டையில் இருந்து சேந்தநாடு வழியாக பண்ருட்டிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும். தார் பாய் விலை அதிகமாக உள்ளதால் பிளாஸ்டிக் ஷீட் விற்க வேண்டும். விக்கிரவாண்டி ஒன்றியம் வி.சாலை பகுதியில் குடிநீர் பற்றாக்குறை உள் ளது. கரும்பு விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் விவசாயிகளிடம் குறைகளை கேட்க வேண்டும். ஏரி வாய்க்கால்கள் சீரமைக்கப்பட வேண்டும். கோலியனூர் வாய்க்கால் சீரமைக்க வேண்டும். உணவு உற்பத்தி குழு வில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். தியாகதுருகம் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற வேண்டும். ரெட்டணை - மண்டகபட்டு இடையே தொண்டியாற்றில் பாலம் கட்ட நிதி ஒதுக்கியும் பணி நடக்க வில்லை. மணலூர்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் சிமென்ட் தரை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us