/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீவனூர் கோவிலில் உறியடி உற்சவம்
/
தீவனூர் கோவிலில் உறியடி உற்சவம்
ADDED : ஆக 23, 2011 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி
விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி காலை சுவாமிக்கு சிறப்பு
பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதனையடுத்து சிறப்பு
அலங்காரத்தில் லட்சுமி நாராயண பெருமாள் அருள் பாலித்தார். நிகழ்ச்சியில்
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். மாலை 6 மணிக்கு
உறியடி உற்சவம் நடந்தது. இரவு 10 மணிக்கு மின் அலங்காரத்துடன் சுவாமி
வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா முனுசாமி மற்றும்
கிராம மக்கள் செய்திருந்தனர்.