sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாலையோரமாக பணி ஒதுக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

/

சாலையோரமாக பணி ஒதுக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

சாலையோரமாக பணி ஒதுக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

சாலையோரமாக பணி ஒதுக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்


ADDED : ஜூன் 12, 2025 10:32 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 10:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே புதுப்பாளையத்தில் சாலையோரமாக 100 நாள் பணி ஒதுக்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டி ஒன்றியம், டி.புதுப்பாளையத்தில் நேற்று தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ்ஓடை பகுதியில் பணி நடந்தது.

அப்போது பணியில் இருந்த மாற்றுத்திறனாளிகள் 10 பேர் தங்களுக்கு சாலை ஓரமாக பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கூறி பணி செய்ய மறுத்து காலை 10:00 மணியளவில் மாற்றுத் திறனாளிகள் சங்க மகளிர் அணி செயலாளர் மங்கையர்க்கரசி தலைமையில் விக்கிரவாண்டி நரசிங்கனுார் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பெரியதச்சூர் சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், பணி மேற்பார்வையாளர் அபிதா, ஊராட்சி செயலாளர்கள் பழனிவேல், சக்திவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பணி நடைபெறும் இடத்தில் அரசு விதிமுறைப்படி ஜி.பி.எஸ்.,லொகேஷன் போட்டோ எடுக்க வேண்டும் என்பதால் அந்த இடத்தில் தான் பணி செய்ய வேண்டும்.

மூன்று சக்கர சைக்கிள் பணி நடைபெறும் இடத்திற்கு செல்லும் வகையில் சரி செய்து தருவதாக கூறியதைத் தொடர்ந்து அனைவரும் 10:30 மணியளவில் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us