/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டியி ல் ஜமாபந்தி நிறைவு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
விக்கிரவாண்டியி ல் ஜமாபந்தி நிறைவு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
விக்கிரவாண்டியி ல் ஜமாபந்தி நிறைவு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
விக்கிரவாண்டியி ல் ஜமாபந்தி நிறைவு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : மே 29, 2025 11:25 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தாலுகா அலுவலத்தில் நேற்று ஜமாபந்தி நிறைவு நாள் விழாவில் பொதுமக்களுக்கு எம்.எல்.ஏ.,நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் 1434 ம் ஆண்டு பசலிக்கான ஜமாபந்தி கடந்த 21ம் தேதி முதல் துவங்கியது. இதில் பொதுமக்களிடமிருந்து 642 மனுக்கள் பெறப்பட்டு 220 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு 15 நாட்களில் தீர்வு காணப்படும் என தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் தாலுகா அலுவலகத்தில் நடந்த நிறைவு விழாவிற்கு ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்கினார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, துணை சேர்மன் ஜீவிதா ரவி, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி முன்னிலை வகித்தனர். தாசில்தார் செல்வமூர்த்தி வரவேற்றார்.
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா 220 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம், பட்டா மாற்றம், ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன், பி.டி.ஓ.,க்கள் சையது முகமது, நாராயணன், செயல் அலுவலர் ேஷக் லத்திப், துணை தாசில்தார்கள் அகமது அலி, தட்சிணாமூர்த்தி, ஹரிதாஸ், தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ், மாவட்ட கவுன்சிலர்கள் மீனா வெங்கடேசன், முருகன், ஒன்றிய ெசயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால், நகர செயலாளர் நைனா முகமது, மாவட்ட தலைவர் பாபு ஜீவானந்தம், வருவாய் ஆய்வாளர்கள் தமிழரசன், தேவசேனா, விஜயலட்சுமி, ராஜலட்சுமி, வி.ஏ.ஓ., சங்க தலைவர் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.