ADDED : மார் 09, 2026 04:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் விழுப்புரம் அரசு இசைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடந்தது.
தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் ராஜாராமன் துவக்கி வைத்தார். இதில், 5 வயது முதல் 16 வயது வரையில் 3 பிரிவுகளாக சிறுவர்களுக்கு குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.
குரலிசை போட்டிக்கு ரிமன்ராஜ், விஜயஸ்ரீ, பரதநாட்டிய போட்டிக்கு வள்ளி, ரகுநாத், ஓவியப் போட்டிக்கு மனோகரன், கீதா, கிராமிய நடன போட்டிக்கு ஹேமா மஞ்சுளா, குணசேகரன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை, திட்ட அலுவலர் மஞ்சம்மாள், குரலிசை ஆசிரியர் சாந்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

