ADDED : டிச 15, 2025 06:38 AM

அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: கீழ் வைலாமூரில் பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.
பெரியதச்சூர் அடுத்த கீழ்வைலாமூர் கிராமத்தில் நமது சிலம்பம் அறக்கட்டளை மற்றும் அன்னை சிலம்பம் இணைந்து அரசு பள்ளி மாணவர்கள் 8 முதல் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வட்டார அளவிலான சிலம்பம் போட்டி நடத்தியது.
போட்டியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 40 பேர் பங்கேற்றனர். அதில் 15 மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர் .
வெற்றி பெற்றவர்களுக்கு பங்குதந்தை பிரான்சிஸ் சேவியர், தனம், சசி எமில்டா மேரி ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர் .
பயிற்சியாளர்கள் சுரேந்தர், அஸ்வினி ,கீழ்வைலாமூர் சமூக சேவை அமைப்பினர், சுற்றுப்புற கிராமங்களிலிருந்து மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்
