/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டம்
/
தி.மு.க., தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஏப் 21, 2025 04:51 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், வானுார் சட்டசபை தொகுதி, பூத் ஏஜன்ட் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வானுார் அடுத்த முட்ராம்பட்டில் நடந்த கூட்டத்திற்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசினார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து, மாவட்ட துணைச் செயலாளர் தயா இளந்திரையன், ஒன்றிய சேர்மன்கள் வாசன், உஷா முரளி, ஒன்றிய செயலாளர்கள் கணேசன், முரளி, ராஜி, மைதிலி ராஜேந்திரன், செல்வமணி, பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.
தலைமை செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், நகர செயலாளர் ஜெயமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் சீனு செல்வரங்கன், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், முன்னாள் சேர்மன் சிவா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அன்பரசு உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழகத்தில் தி.மு.க., அரசின் சாதனைகளை, சமூக வலைதளங்கள் வாயிலாக, கிராமங்கள் தோறும் எடுத்துச் செல்ல வேண்டும். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பணிகளை பூத் ஏஜன்ட்டுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். தீவிரமாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.