/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
/
திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : பிப் 09, 2026 04:12 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் திரவுபதி அம்மன் கோவிலில் மகா கும்பாபிேஷக விழா நடந்தது.
விழா கடந்த 6ம் தேதி காலை 9:00 மணியளிவில் அனுக்கைஞ், விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
நேற்று முன்தினம் காலை 8:30 மணியளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று 6:30 மணியளவில் நான்காம் கால யாகசாலை பூஜையும், 10:30 மணியளவில் கடம் புறப்பாடாகி மூலவர் ஸ்துாபி விமான கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. கும்பாபிேஷகத்தை அர்த்தநாரீச சிவாச்சாரியார், அருள்நந்தி சிவாச்சாரியார் நடத்தி வைத்தனர்.
விழாவில் திருவெண்ணெய்நல்லுார் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

