/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிழக்கு நகர தி . மு . க ., செயல்வீரர்கள் கூட்டம்
/
கிழக்கு நகர தி . மு . க ., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : ஜூன் 15, 2025 11:56 PM

விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்டம் கிழக்கு நகர தி.மு.க., அலுவலகம் திறப்பு விழா மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் காகுப்பம் சாலையில், கிழக்கு நகர தி.மு.க., அலுவலகத்தை மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்து இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, திருமண மண்டபத்தில், கிழக்கு நகர தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர் தயா இளந்திரையன் முன்னிலை வகித்தனர். நகர பொறுப்பாளர் வெற்றிவேல் வரவேற்றார். மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசுகையில்;
மத்திய பா.ஜ., அரசு தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் போது, அதை மீட்டெடுக்கும் போராளியாக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார். பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை வகுத்துள்ளார்.
எதிர்கட்சியின் கோட்டையாக உள்ள வானுார் சட்டசபை தொகுதியை இந்த தேர்தலில் தி.மு.க., கோட்டையாக மாற்ற வேண்டும் என கூறினார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் பஞ்சநாதன், சம்பத், அவை தலைவர் கற்பகமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாணவரணி அமைப்பாளர் வினோத், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வபிரேம், நகர துணை செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட பிரதிநிதிகள் ஜமாலுதீன், நந்தா நெடுஞ்செழியன், சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் முகமது அலி, மாணவரணி துணை அமைப்பாளர் லெனின் விஜய், தொழிலாளரணி துணை அமைப்பாளர் ராஜா, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.