/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சியில் இன்று கல்விக்கடன் மேளா
/
செஞ்சியில் இன்று கல்விக்கடன் மேளா
ADDED : செப் 25, 2025 11:35 PM
விழுப்புரம்: மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து, செஞ்சியில் இன்று கல்விக்கடன் மேளா நடத்த உள்ளதாக, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து இன்று, செஞ்சி தாலுகா ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்கபூபதி பொறியியல் கல்லுாரியில் மாபெரும் கல்விக்கடன் மேளாவை நடத்துகிறது.
இந்த முகாமில், குறைவான வட்டி விகிதம்; 15 ஆண்டு தவணைக்காலம்; செயலாக்க கட்டணம்; உடனடி கடன் வழங்குதல்; ஆகிய அம்சங்களுடன் ரூ.7.50 லட்சம் வரை வங்கி விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்படுகிறது.
கல்விக்கடன் பெறுவதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோரின் பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சமர்பித்து கல்வி கடனை பெற்று பயன்பெறலாம்.
மாணவர்கள் தேவையான ஆவணங்களை https://pmvidyalaxmi.co.in/StudentLogin.aspxvd;w என்ற இணையதளத்தில் பதிவு செய்து சமர்ப்பித்து கடன் அனுமதி ஒப்புகை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.