sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

28 நடுநிலைப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்: எம்.எல்.ஏ., தகவல்

/

28 நடுநிலைப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்: எம்.எல்.ஏ., தகவல்

28 நடுநிலைப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்: எம்.எல்.ஏ., தகவல்

28 நடுநிலைப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்: எம்.எல்.ஏ., தகவல்


ADDED : ஜூலை 22, 2025 08:18 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 08:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : 'விக்கிரவாண்டி தொகுதியில் 28 அரசு நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும்' என அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

விக்கிரவாண்டி தொகுதி யில் 33 அரசு நடுநிலைப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளாக (ஸ்மார்ட் கிளாஸ்) தரம் உயர்த்தி தர வேண்டி தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாடு நிறுவனத்திற்கு கோரிக்கை வைத்திருந்தேன்.

அதன் பேரில் தொகுதியில் உள்ள 28 அரசு நடுநிலைப் பள்ளிகளில் தலா 2 லட்சம் ரூபாய் மதிப்பில் திறன்மிகு வகுப்பறைகளாக மாற்றி அமைத்திட 48.51 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் 28 பள்ளிகளில் திறன்மிகு (ஸ்மார்ட்) வகுப்பறைகளாக மாற்றப்பட உள்ளது.

மேலும், தொகுதியில் விக்கிரவாண்டி மகளிர் உயர்நிலைப்பள்ளி, மேல்காரணை, கஞ்சனுார் அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கான பரிசீலனையில் உள்ளது. விரைவில் இப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

இவ்வாறு அன்னியூர் சிவா எம்.எல்.ஏ.,தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us