/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கைலாசநாதர் கோவிலில் ஏகாதச ருத்ர ஜெபஹோம பாராயணம்
/
கைலாசநாதர் கோவிலில் ஏகாதச ருத்ர ஜெபஹோம பாராயணம்
ADDED : அக் 06, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு சங்கல்பம், 10:00 மணிக்கு கைலாசநாதருக்கு 1,008 தாமரை பூக்களால் சிறப்பு ருத்ர ஹோமமும், 10:30 மணிக்கு ருத்ரா அபிஷேகம், ஜெபம் நடந்தது.
பகல் 12:00 மணிக்கு பூர்ணாஹூதி, சுவாமிக்கு மகா தீபாராதனை, 12:15 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்தனர்.