/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது
/
புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது
ADDED : ஜூலை 27, 2025 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளிமேடுப்பேட்டை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் இளமங்கலம் ஏரிக்கரையில் நேற்று காலை 11:30 மணிக்கு ரோந்து சென்றனர்.
அப்போது செஞ்சி வட்டம், இந்திரசன் குப்பம் கிராமத்தை சேர்ந்த குமார், 60; என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த போது பிடிபட்டார். இவரிடமிருந்து ஹான்ஸ், கூல்லிப், விமல் பான்பராக் ஆகிய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.