ADDED : டிச 27, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்,; காணை அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
காணை அருகே குயவன்காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி,65; இவர், அருகிலுள்ள பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியிடம் கடந்த 24ம் தேதி உள்ளே புகுந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதை பாதித்த சிறுமி தனது தாயிடம் கூறியதன் பேரில், அவர் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசாரிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
இதன் பேரில், போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து சுப்பிரமணியை கைது செய்தனர்.

