ADDED : மார் 16, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த பொய்யபாக்கம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 70; இவர், கடந்த 10ம் தேதி வளவனுார் அருகே குடுமியான்குப்பம் பகுதியில், விழுப்புரம் மார்க்க சாலையோரம் நடந்து சென்றார்.
அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த வெங்கடேசன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இறந்தார்.
அவரது மகன் மதியழகன் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

