ADDED : ஜூன் 01, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே இருசக்கர வாகன விபத்தில் முதியவர் இறந்தார்.
வளவனுார் அருகே எல்.ஆர்., பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்,75; இவரை, அதே பகுதியை சேர்ந்த பாரதி,51; என்பவர் தனது மொபட்டில் அமர வைத்து கொண்டு விழுப்புரம் - புதுச்சேரி மார்க்கமாக நேற்று முன்தினம் சென்றார்.
கெங்கராம்பாளையம் அருகே சென்ற போது, பின்னால் வந்த ஸ்கூட்டர் திடீரென மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் காயமடைந்த முத்துகிருஷ்ணனை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.