ADDED : மார் 15, 2025 08:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 60; இவர், கடந்த 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். கடந்த ஜனவரி 2ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.