/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்சாரம் தாக்கிய மூதாட்டி சாவு
/
மின்சாரம் தாக்கிய மூதாட்டி சாவு
ADDED : ஜூலை 21, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : காணை அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி இறந்தார்.
காணை அடுத்த ஆசாரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி ஆண்டாள், 71; இவர், கடந்த 15ம் தேதி அதே கிராமத்தில் தனது நிலத்தில் உள்ள வேர்க்கடலை பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஸ்விட்சை போட்டபோது மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தார்.
உடன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்தவர், 17ம் தேதி உடல் நிலை பாதித்து மீண்டும் மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆண்டாள் இறந்தார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.