ADDED : ஜன 01, 2026 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்தவர் மணி மனைவி ராஜேஸ்வரி,69; இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள சாலையை நடந்து கடந்த போது, உளுந்துார்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பைக் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார், பைக் ஓட்டி வந்த விக்னேஷ் என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

