ADDED : ஜன 23, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: அரசு பஸ் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கொத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு, 64; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை 8:15 மணிக்கு மடப்பட்டு - திருக்கோவிலுார் சாலையில் பெரிய சேவலையை நோக்கி நடந்து சென்றார்.
அப்போது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த சின்னபொண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புகாரின் பேரில் திருவெண்ணைநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

